9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ரூபாய் 1000 உடனே விண்ணப்பிங்க.
மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டும் அவர்களின் கல்வி வளர்ச்சி நிலையினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது. மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது 2025 ஆம் ஆண்டுக்குரிய மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது
இதற்காக தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த தேர்வுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஜனவரி 24 க்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி