விவசாயிகளுக்கு வருது புதிய அடையாள எண் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு செயல்பாடுகள் செயல்படுத்தி வருகிறது .மேலும் விவசாயம் செய்வதற்கு விவசாய கடன் மானிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டும் உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் வேளாண் துறை சார்பில் தற்பொழுது துவங்க உள்ளது என்றும், நாடு முழுவதும் 11.8 கோடி விவசாயிகள் உள்ளனர் என்றும் இதில் 80 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் சிறு விவசாயிகள் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர் பெரிய விவசாயிகள் என்றும் வேளாண்மை துறை சார்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான தேவையான உதவிகளை மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது மத்திய அரசு தகவலை விவசாயிகளின் பெயர் நிலங்கள் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கிரியன்ஸ் என்ற மொபைல் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்
தற்பொழுது தமிழக வேளாண்மை துறை சார்பில் பயிர் சாகுபடி தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்காக பார்மர்ஸ் ரிஜிஸ்டரி என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் இந்த மொபைல் செயலி மூலம் விவசாயிகள் குறித்த விவரங்களை சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு அடையாள எண் உருவாக்குவதற்கான பதிவு இம்மாதம் விரைவில் தொடங்கும் என்றும் ,ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நாட்களில் வேளாண்மை துறை அலுவலர்கள் அங்கு சென்று விவசாயிகளின் தங்களுடைய விபரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் தற்பொழுது ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கும் அடையாள எண் பதிவு செய்து வரும் காலங்களில் விவசாயிக்கு தேவையான உதவிகளை இந்த எண்ணின் மூலம் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட விவசாய பணிகள் மற்றும் சேவைகளை செய்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த தகவல் குறித்து கூடுதல் விபரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி